நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னையை வந்தடையும். மறுமார்க்கத்தில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு நெல்லை சென்றடையும். இதேபோல், சென்னை-விஜயவாடா இடையே அறிமுகப்படுத்தவுள்ள வந்தே பாரத் ரயிலானது மொத்தமுள்ள 516.66 கி.மீ தொலைவை 6.40 மணி நேரத்தில் அதிகபட்சமாக 77.49 கி,மீ வேகத்தில் செல்லும். இந்த ரயில் புதன் கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படவுள்ளது. சென்னை-நெல்லை இடையே செப்.24ம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து சென்னையில் இருந்து 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை பேசின்பிரிட்ஜில் இருந்து காட்பாடி வரை நேற்று வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடந்தது.