சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் இயக்கத்தை தடுக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெட்ரோ ரயிலின் கதவுகளை மூட விடாமல் தடுப்பது, சிரமத்தை ஏற்படுத்துவது போன்றவை தண்டனைக்குரிய குற்றம். மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு இடையூறு செய்வோருக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது. மெட்ரோ ரயிலின் இயக்கத்துக்கு இடையூறு செய்வோர் குறித்து 1860-425-1515 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.