சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் உயிரிழந்தார். இந்த விபத்தில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது.