சென்னை: சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள டயர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டயர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை வெளியேறியதால் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. டயர் குடோனில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.