சென்னை கோயம்பேட்டில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை..!!

சென்னை: சென்னை கோயம்பேடு சீமாத்தம்மன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த காவலர் சுகந்தி (25) தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். விழுப்புரத்தை சேர்ந்த சுகந்தி, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். சுகந்தியும் அவிநாசி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் விஷ்ணு என்பவரும் காதலித்து வந்துள்ளனர். காதலன் விஷ்ணுவுடன் வீடியோ காலில் பேசியபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சுகந்தி கூறியுள்ளார். காவலர் சுகந்தி தற்கொலைக்கான காரணம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது