சென்னை: சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ரூ.80.48 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. கோயம்பேட்டில் இருந்து பாடி, அம்பத்தூர் வழியே ஆவடி வரை தோராயமாக 16 கி.மீ தூரத்திற்கு வழித்தடம் அமைக்க திட்டம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 2024ம் ஆண்டுக்குள் இப்பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.