சென்னை: சென்னை காமராஜர் துறைமுகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. கண்டெய்னர் முனையத்துக்கு ஓட்டுநர் முருகேசன் அதிகாலை லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென துறைமுகத்தின் உள்பகுதி கடலில் தலைகுப்புற கவிழ்ந்தது. லாரி கடலில் கவிழ்ந்ததும் உடனடியாக துறைமுக பணியாளர்கள் ஓட்டுநர் முருகேசனை மீட்டனர்.