சென்னை: மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி வருகிற 27ம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஆர். ஸ்ரீராமின் முழுபெயர் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம். மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டம் பயின்ற கே.ஆர். ஸ்ரீராம், 1986ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வணிக சட்டம், சேவை வரி உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.