இதையடுத்து வழக்கமான அகலப்பாதைக்கு பதில் 1435 மி.மீ. அகல தண்டவாள பாதைகளில் ஓடக்கூடியதாக அதிவிரைவு ரயில் தயாரிக்கப்பட உள்ளது. 1435 மி.மீ. இடைவெளியில் அமைக்கப்படும் தண்டவாளம் கொண்ட ரயில் பாதை ஸ்டாண்டர்டு பாதை என அழைக்கப்படுகிறது. மணிக்கு 250கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியதாக புதிய அதிவேக ரயில் தயாரிக்கப்பட்டாலும் 220 கி.மீ. வேகத்திலேயே-இயக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் மற்றும் மோனோ ரயில்கள் ஸ்டாண்டர்டு பாதை ரயில்களாகும். வந்தேபாரத் ரயில்களை போல 8 பெட்டிகளைக் கொண்டதாக 250 கி.மீ. அதிவேக ரயில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட உள்ளது. இந்த இரண்டு ரயில்களும் 2025 இறுதிக்குள் வடிவமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.