அதை கடந்த 3ம் தேதி விசாரணை செய்த உயர்நீதிமன்றம், இதுபற்றி ஆய்வு செய்து, தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர், பொதுப்பணித்துறை செயலாளர், அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் தனித்தனியே அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், குளங்களை கலெக்டருடன் இணைந்து ஆய்வு செய்ய ஐகோர்ட் வழக்கறிஞர் எம்.சி.சாமி என்பவரை உயர்நீதிமன்றம் நியமித்தது.
அதன்படி, வழக்கறிஞர் எம்.சி.சாமி நேற்று, திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியனுடன் இணைந்து குளங்களை நேரில் ஆய்வு செய்தார். அக்னி லிங்கம், பாண்டேஸ்வரர் கோயில், பாண்டவ தீர்த்தகுளம், மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளதா என அவர்கள் பார்வையிட்டனர். இந்த ஆய்வு அறிக்கை விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.