சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க வந்த 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து தத்தளித்தன. அதில் 4 விமானங்கள், பெங்களூருக்கு திரும்பி அனுப்பப்பட்டன. மழை, சூறைக்காற்று காரணமாக, மொத்தம் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிபட்டுள்ளனர்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நினைவிடத்துக்கு அமைதி பேரணி

உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

கலைஞர் வழியில் உழைத்து மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க இந்நாளில் உறுதியேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு