சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி வழங்க பேரிடர் மேலாண்மைத் துறை திட்டமிட்டுள்ளது. பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களை மீட்பது குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இணைத்து பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது.