சுமார் 1000 மரக்கன்றுகளை நட உள்ளோம். இதனை மற்ற நாடுகளிலும் தொடருவோம். செயற்கை இழை களத்தில் தண்ணீர் பயன்பாட்டை குறைக்க நாடுகளின் காலநிலை உட்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. கிரிக்கெட்டை போல ஆண்டு முழுவதும் தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன. அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை பரிசீலிப்போம். ஹாக்கி விளையாடும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முன்பாக, கூட்டமைப்பில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியா- பாகிஸ்தான் போட்டிகளை நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. சென்னையில் கட்டாயம் மறுபடியும் சர்வதேச போட்டிகள் நடைபெறும். இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் சர்வதேச போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நடைபெறும் ஆட்டங்களைக் காண பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் வருவது உற்சாகம் அளிக்கிறது. சென்னை ரசிகர்களின் ஆதரவு அபாரம். – எப்.ஐ.எச் தலைவர் முகம்மது இக்ரம்