சென்னை: சென்னை நெமிலிச்சேரியில் நண்பரின் கடைக்கு பலகை நடும் பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியானார். வீடுகளுக்கு செல்லும் மின்சார கம்பி மீது பெயர் பலகை மோதியதில் மின்சாரம் தாக்கி ரூபேஷ் (23) உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய விபத்தில் தினேஷ்குமார் என்பவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.