சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடலில் ஆழம், சுழற்சி தெரியாமல் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர் என்று உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். பண்ணை வீட்டில் தங்குவோரை கடலில் குளிக்க உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது என்று வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.