சென்னையில் இன்று முதல் 5 நாள் டிரோன் பறக்க தடை

சென்னை: சென்னையில் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாமல்லபுரத்தில் நாளை முதல் 21ம் தேதி வரை நடக்கும் ஜி-20 மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த பிரதிநிதிகளின் வருகையை முன்னிட்டு அவர்கள் தங்கும் இடங்கள், அவர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் உள்ளிட்ட அனைத்தும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு 18ம் தேதி (இன்று) முதல் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு சென்னையில் டிரோன்கள் பறக்க காவல் துறை தடைவிதித்துள்ளது. மேலும், ஜி-20 பிரதிநிதிகள் செல்லக்கூடிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்