கள்ளக்காதலனுடன் மனைவி எஸ்கேப்: சென்னை டிரைவர் தற்கொலை


அலங்காநல்லூர்: மூன்று பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால், சென்னை கால்டாக்ஸி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், பாலமேட்டை சேர்ந்தவர் பொன்வேந்தன் (35). இவர், சென்னையில் கால்டாக்சி ஓட்டி வந்தார். இவரது மனைவி முத்துப்பிரியா (30). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். முத்துப்பிரியா பாலமேட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தபோது, அவருக்கு மற்றொரு நபருடன் தகாத உறவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கள்ளக்காதலனுடன் முத்துப்பிரியா சென்றுவிட்டார். இது குறித்து பாலமேடு காவல்நிலையத்தில் பொன்வேந்தன் புகார் தெரிவித்தார். மேலும், 3 குழந்தைகளையும் தனது தாய் வீட்டில் விட்டுள்ளார்.

குழந்தைகளையும், தன்னையும் தவிக்க விட்டுச் சென்ற மனைவியை நினைத்து பொன்வேந்தன் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை 5 மணியளவில் பாலமேடு காவல்நிலையம் முன்பு உள்ள சாலையில் பொன்வேந்தன் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். அவரது உடலில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பு; இந்தியாவை விமர்சித்த ஈரான் தலைவர்: வெளியுறவு துறை கடும் கண்டனம்

டெல்லியின் ஒரே முதல்வர் கெஜ்ரிவால்தான் : புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பேட்டி

ஜம்மு-காஷ்மீருக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து எதுவும் குறிப்பிடவில்லை: 10 ஆண்டில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை