Tuesday, September 17, 2024
Home » கள்ளக்காதலனுடன் மனைவி எஸ்கேப்: சென்னை டிரைவர் தற்கொலை

கள்ளக்காதலனுடன் மனைவி எஸ்கேப்: சென்னை டிரைவர் தற்கொலை

by Neethimaan


அலங்காநல்லூர்: மூன்று பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால், சென்னை கால்டாக்ஸி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், பாலமேட்டை சேர்ந்தவர் பொன்வேந்தன் (35). இவர், சென்னையில் கால்டாக்சி ஓட்டி வந்தார். இவரது மனைவி முத்துப்பிரியா (30). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். முத்துப்பிரியா பாலமேட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தபோது, அவருக்கு மற்றொரு நபருடன் தகாத உறவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கள்ளக்காதலனுடன் முத்துப்பிரியா சென்றுவிட்டார். இது குறித்து பாலமேடு காவல்நிலையத்தில் பொன்வேந்தன் புகார் தெரிவித்தார். மேலும், 3 குழந்தைகளையும் தனது தாய் வீட்டில் விட்டுள்ளார்.

குழந்தைகளையும், தன்னையும் தவிக்க விட்டுச் சென்ற மனைவியை நினைத்து பொன்வேந்தன் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை 5 மணியளவில் பாலமேடு காவல்நிலையம் முன்பு உள்ள சாலையில் பொன்வேந்தன் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். அவரது உடலில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

20 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi