சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 38.04% நீர் இருப்பு உள்ளது


சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 38.04% நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 102 கனஅடியாக சரிந்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2490 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 178 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 98 மில்லியன் கனஅடியாக உள்ளது. வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 307 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 38.04% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4.472 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 40.9%, புழல் – 75.45%, பூண்டி – 2.66%, சோழவரம் – 9.06%, கண்ணன்கோட்டை – 61.4% நீர் இருப்பு உள்ளது.

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து