சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.78% நீர் இருப்பு

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 224 கனஅடியாக அதிகரிப்பு. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2479 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 93 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 310 மில்லியன் கனஅடியாக உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 37.78% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4.442 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 39.98%, புழல் – 75.12%, பூண்டி – 3.4%, சோழவரம் – 8.6%, கண்ணன்கோட்டை – 62%, நீர் இருப்பு உள்ளது.

 

Related posts

காஷ்மீரில் பேருந்து விபத்தில் 2 வீரர்கள் வீரமரணம்

ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மொழிப்பெயர்ப்பில் ‘தமிழ்’ முன்னிலை: தலைமை நீதிபதி பெருமிதம்

ஒட்டன்சத்திரம் அருகே கோழி பண்ணையில் தீ விபத்து