சென்னை : குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து செல்வராஜ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் உதவியுடன் ரூ.3.30 லட்சம் வரை மோசடி நடைபெற்றுள்ளதால் குண்டர் சட்டம் போடப்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.