சென்னை: திருப்போரூரை சேர்ந்தவர் ரத்தினராஜ். இவர், சென்னையில் வீடு கட்ட விருதுநகரில் வசிக்கும் அண்ணன் கிருஷ்ணனிடம் பல தவணைகளில் ரூ.41 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் கிருஷ்ணன் வீடு கட்டி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் ரத்தினராஜ் புகார் அளித்தார். இதையடுத்து கிருஷ்ணனின் மகன் யோகவேல்ராஜ், இருவரும் பேசி முடிவெடுக்கலாம் என கூறி அழைத்துள்ளார்.
அதை நம்பி ரத்தினராஜ், அவரது மனைவி சரண்யா ஆகியோர், கடந்த 25ம் தேதி விருதுநகரில் உள்ள கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றனர். அப்போது, யோகவேல்ராஜ் உள்பட 4 பேர் சேர்ந்து இருவரையும் தாக்கினர். படுகாயமடைந்த தம்பதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். புகாரின்படி விருதுநகர் மேற்கு போலீசார், யோகவேல்ராஜ், அவரது அண்ணன் கார்த்திக்ராஜ், தாய் நிர்மலாதேவி உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேடிவருகின்றனர்.