புகார்களுக்கு தீர்வு காணாமல் முடித்துவைத்தால் நடவடிக்கை : சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை : சென்னை மாநகராட்சியில் 1913 எண்ணில் மக்கள் பதிவு செய்யும் புகார்களுக்கு தீர்வு காணாமல் முடித்துவைத்தால் மாநகராட்சி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி சேவை குறைபாடுகளை தெரிவிக்க 1913 என்ற எண்ணுக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. ஆனால் புகாருக்கு தீர்வு காணாமல் புகாரை சரி செய்துவிட்டதாக பதிவிட்டு முடித்துவைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்