சென்னை: மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச விமான முனையங்களில் நேற்று அதிகாலையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள், சுமார் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களான சிங்கப்பூர், பாங்காக், மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட 15 சர்வதேச விமானங்கள் மற்றும் மும்பை, டெல்லி, ஐதராபாத், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 37 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்கள் தாமதத்திற்கு முக்கிய காரணம், மழையால் பயணிகள் தாமதமாக வருவதுதான்.எனவே, உள்நாட்டுப் பயணிகள் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும், சர்வதேச பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாகவும் வந்தால் தாமதத்தை தவிர்க்கலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.