சென்னை: சென்னையில் நகர சரக்கு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும சிறப்பு அலுவலர் 22 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 6 மாதத்திற்குள் சென்னை பெருநகருக்கான நகர சரக்கு போக்குவரத்து திட்டத்தை தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 5904 சதுர கிலோ மீட்டர் கொண்ட சென்னை பெருநகருக்கான சரக்கு போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்பட உள்ளது.