சென்னை: சென்னை திருவான்மியூரில் காசா கிராண்ட் நிறுவனத்தில் ஆவணங்களை ஊழியர் திருடியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விளம்பர ஆவணங்கள், ரகசிய தகவல்களை திருடி வேறு நிறுவனத்துக்கு அளித்ததாக ஊழியர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா கிராண்ட் நிறுவனத்தின் உதவி மேலாளர் அளித்த புகாரில் திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.