சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்பூர் அடுத்த ஜமீன் பகுதியை கடந்தபோது முன்னால் வேலூர் நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராமல் அரசு பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் என 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.