சென்னை: சென்னையில் பாஜகவினர் புதிய கொடிக் கம்பம் அமைக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற கடிதம் இணைக்கப்படவில்லை எனக்கூறி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். புதிதாக பா.ஜ.க. கொடிக் கம்பம் வைக்க சென்னை மாநகராட்சி சார்பாக அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி இன்றி கொடிக் கம்பம் நட்டால் மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு அகற்றப்படும் என காவத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே மற்ற கட்சியினர் வைத்துள்ள இடங்களில் கூட கொடி கம்பம் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.