சென்னை: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 371 விளம்பரப் பலகைகள் கட்டுமானத்துடன் முழுவதுமாக அகற்றப்பட்டது. வணிக நிறுவனங்கள் மாநகராட்சி உரிமம் பெறாமல், இடையூறு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பலகை வைத்ததாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் தியாகராயர் நகர், பனகல் பூங்கா, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் அனுமதி பெறாத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது.