Saturday, September 21, 2024
Home » சென்னையில் விபத்தில்லா விழிப்புணர்வு நாள் 1000 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம்: போக்குவரத்து காவல்துறை வழங்கியது

சென்னையில் விபத்தில்லா விழிப்புணர்வு நாள் 1000 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம்: போக்குவரத்து காவல்துறை வழங்கியது

by Ranjith

சென்னை: சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில், விபத்தில்லா விழிப்புணர்வு நாளின் ஒரு பகுதியாக, இருசக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் முயற்சியாக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 1000 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டது. அதேபோல், நேற்று முன்தினம் சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு எதிராக 1,53,341 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் நபர்களுக்கு எதிராக 1,04,721 வழக்குகளும் பதிவு செய்துள்ளது.

வாகன ஓட்டிகள் 90% தலைக்கவசம் அணிந்து செல்லும் விகிதம் இருந்த போதிலும், பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் நபர்கள் 63% மட்டுமே தலைக்கவசம் அணிந்து விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். அச்சுறுத்தும் வகையில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர்களிடையே மிகக் குறைந்த விகிதத்தில் காணப்படுகிறது. மாணவர்கள் தலைக்கவசம் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, சென்னை போக்குவரத்து காவல்துறையினர் நேற்று மாநில பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைக்கவசம் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தது.

You may also like

Leave a Comment

9 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi