சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் உத்தி குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.