சென்னை: சென்னையில் அண்ணா சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நகரின் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பியதும் சில இடங்களில் தண்ணீர் தேங்கியதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை உள்ளிட்ட இடங்களிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.