இதுகுறித்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநிலங்களில் நிலவி வரும் கடுங்குளிர் காரணமாக விமானங்கள் தாமதமாக சென்னைக்கு வருகின்றன. இதனால் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என்றார்.இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து இன்று மதியம் 12.50 மணியளவில் அயோத்திக்கு புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் பிற்பகல் 2.35 மணியளவில் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், இன்று ஒரே நாளில் மோசமான வானிலை காரணமாக சென்னையில் வருகை, புறப்பாடு என மொத்தம் 30 விமானங்களின் சேவைகள் தாமதமாகி வருகின்றன.