சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.07 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணி முகமது ஹாதி, ஏஜஎஸ்எல் ஊழியர்கள் மதியுல்லா, வெங்கடேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஊழியர்கள் விமான நிலைய கழிவறையில் வைத்து பயணியிடம் தங்கத்தை கொடுத்த போது சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.