இதுதொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், சுற்றுலா துறை ஆணையர் காகர்லா உஷா, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் காந்தி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, தீயணைப்புத்துறை, சுற்றுலாத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, போக்குவரத்துத்துறை, தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன், தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம், மின்சாரத்துறை, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் போன்ற 16 அரசு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளவார்கள். விழாவினை சிறப்பான வகையில் செயல்படுத்த தேவையான ஒத்துழைப்பினை அனைத்து துறைகளும் வழங்கிட வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் வரையறை செய்யப்பட்ட பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும். சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா தொடர்பான அனைத்து பணிகளையும் சரியான முறையில் திட்டமிட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை வாழ் பொதுமக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலை வடிவங்களை கண்டு களிக்க ஏதுவாகவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் பொருட்டும் இந்த விழா சென்னையில் வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்தப்படுகிறது.