சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் 10 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய புஷ்பா (41) என்பவரின் கழுத்திலிருந்து தங்கச் சங்கிலியை பறித்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.