சென்னை: சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் 10 இடங்கள் அதிக விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. சாலை விரிவாக்கத்தின் மூலம் சென்னை – திருப்பதி சாலையில் விபத்துகள் நடைபெறுவது தடுக்கப்படும். செங்குன்றம் முதல் இரும்புலியூர் வரையிலான புறவழிச் சாலையில் மட்டும் 5 இடங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடக்க உள்ளன. கோயம்பேடு – மதுரவாயல் இடையேயும் திண்டிவனம் நெடுஞ்சாலையிலும் தலா 3 இடங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.