சென்னை: சென்னை தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே சங்கர் என்பவர் கொலை வழக்கில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 27ல் மர்மமான முறையில் தலையில் பலத்த காயங்களுடன் சங்கர் உயிரிழந்து கிடந்துள்ளார். பிரேத பரிசோதனையில் கட்டையால் பின்பக்க மண்டையில் தாக்கியத்தில் சங்கர் உயிரிழந்தது தெரியவந்தது. வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆரணியைச் சேர்ந்த சாவித்திரி (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.