சென்னை: சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள ஒமேகா பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உடன் சோதனை செய்து வருகின்றனர். தகவல் அறிந்ததும் பள்ளி முன்பு கூடிய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல காத்திருந்தனர். மின்னஞ்சலில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.