5 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு அருகில் இருந்த மின்மாற்றியே காரணம் என கூறப்படுகிறது. மின் மாற்றியில் பிடித்த தீ வணிக வளாகத்திற்குள் பரவி விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.