சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போதை ஊசி விற்கும் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவண்ணாரப்பேட்டை பர்மா நகரில் உள்ள பாழடைந்த கட்டத்தில் போதை ஊசி புழக்கம் என போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்றூ போலீசார் சோதனை செய்தபோது போதைஊசி பயன்படுத்துவது தெரிந்தது.