சென்னை பனையூரில் ஹார்டுவர்ஸ் கடை குடோனில் தீ விபத்து: குழந்தைகளுடன் உயிருக்கு போராடிய தாய்

சென்னை: சென்னை பனையூரில் உள்ள ஹார்டுவர்ஸ் கடை குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கேரளாவை சேர்ந்த மஞ்சுளா என்பவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பல ஆண்டுகளாக ஹார்டுவர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடையின் மேல்தளத்திலே குடோனும் வைத்திருக்கும் நிலையில், அங்கு கடையில் பணிபுரியும் பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் மஞ்சுளா தங்க வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட, அதிர்ச்சியடைந்த பணிப்பெண் குழந்தைகளுடன் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டு கூச்சலிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயை போராடி அணைத்த நிலையில், தாய் உட்பட இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு