சென்னையில் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணம் இழப்பு

சென்னை: இந்த ஆண்டு சென்னையில் மட்டும் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணத்தை இழந்துள்ளதாகச் சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 8 மாதங்களில் இது போன்ற 190 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வயதானவர்கள், பெண்களை குறிவைத்து இந்த மோசடிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதில் இருந்து தப்பிக்க, 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தல்

 

Related posts

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்