சென்னை: இந்த ஆண்டு சென்னையில் மட்டும் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணத்தை இழந்துள்ளதாகச் சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 8 மாதங்களில் இது போன்ற 190 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வயதானவர்கள், பெண்களை குறிவைத்து இந்த மோசடிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதில் இருந்து தப்பிக்க, 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தல்