சென்னை: சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்கள் வரை மின் கட்டண நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவு அளித்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்துமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் பாக்கி வைத்திருக்கும் தொகையை உரிய வழிமுறைகளை பின்பற்றி வசூலிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.