சென்னை மணலியில் விஷ வாயு தாக்கியதால் நேர்ந்த சோகம்.. 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை மணலியில் உள்ள பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பு ஆலையில் விஷ வாயு தாக்கி கூலித்தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். சென்னை மணலியில் தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் லிமிட்டெட் தொழிற்சாலையில் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென விஷ வாயு தாக்கியது.

அப்போது தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த இருவர் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர். உடனே இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து உடற்கூறாய்வுக்காக இருவரது உடல்களும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக சாத்தான்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!