இவர்கள் குஜராத உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், மேலும் இவர்கள் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து இவர்கள் சென்னை வழியாக அகமதாபாத் சென்றுள்ளதால் சென்னையில் யாரிடமும் தொடர்புள்ளதா என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்றது. குறிப்பாக குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட 4 நபர்களிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முகமது நசரத் என்பவர் சென்னையில் குருவியாக செயல்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர் இலங்கையில் தடைசெய்யப்பட்ட தேசிய சவுரி ஜமாத் உடன் தொடர்பில் இருப்பதும் அதன் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடிக்கடி இந்த முகமது நசரத் என்பவர் சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை விரிவுபடுத்த செயல்பட்டாரா என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. இவர் சென்னையில் இருந்து சென்றுள்ளதால் சென்னையிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.