உடனே கோயில் நிர்வாகியான வெங்கட கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரியிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார். கோயில் நிர்வாகி விரைந்து வந்து பார்த்த போது, கோயிலின் கருவறையில் வைத்திருந்த 4.5 கிலோ மதிப்புள்ள வெள்ளி பூஜை பொருட்கள் மற்றும் வெள்ளி கவசம் மாயமாகி இருந்தது. பின்னர் சம்பவம் குறித்து கோயில் நிர்வாகி வெங்கடகிருஷ்ணன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோயில் அமைந்துள்ள சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோட்டூர் கார்டன் பகுதியில் கோயிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.