சென்னை: அடுத்த 4 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 30 முதல் 45 நிமிடம் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன்தெரிவித்துள்ளது. ஒரு நாள் வடசென்னையிலும், ஒரு நாள் தென் சென்னையிலும் அல்லது ஒரு நாள் சென்னை முழுவதும் இன்று போல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் வரும் 25ம் தேதி முதல் பருவமழை அதிக அளவு பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது.