இந்நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பின்பு, வரும் 2024 பிப்ரவரி 2ம் தேதியில் இருந்து, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும், ஹாங்காங்- சென்னை- ஹாங்காங் இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமான சேவை வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும். இது தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு சென்னையில் இருந்து ஜப்பான், தென் கொரியா, லண்டன் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு, இந்த விமானம் இணைப்பு விமானமாகவும் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.