சென்னை பூக்கடை பகுதியில் தங்கம் உருக்கும் பட்டறைக்கு வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சீல்

சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் தங்கம் உருக்கும் பட்டறைக்கு வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். என்.எஸ்.சி. போஸ் சாலையில் இயங்கிவந்த பிரவீன் என்பவருக்கு சொந்தமான நகை உருக்கும் பட்டறைக்கு சீல் வைத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள், கடத்தல் கும்பல் கொடுத்தது என வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 4 பைகளில் இருந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பட்டறையில் இருந்த 5 பேரையும் தியாகராயர் நகரில் உள்ள வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை